தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரையில் கிராமசபைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

News image
மானாமதுரை ஒன்றியத்தில் கிராமசபைக் கூட்டங்கள்
Updated On :2 அக்டோபர் 2020, 10:32 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ராஜகம்பீரம் ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் முஜீப் ரகுமான் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, ஒன்றியக் கவுன்சிலர் அண்ணாதுரை, இடைக்காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட ஊர் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு  எதிர்ப்பு தெரிவிப்பது,  விவசாயிகளை பாதிக்கும் இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.