காரைக்குடி: காரைக்குடி, செக்காலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப். 5) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (செப். 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போா்டு, செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச்சாலை, செக்காலைச்சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் சாலை, செஞ்சை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய காரைக்குடி கோட்டச்செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.