நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்69 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 5:08 pm

DIN

சிவகங்கை/ராமநாதபுரம்: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,146 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மேலும் 48 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,194 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 81 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 14 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 67 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 21 பேருக்கு தீநுண்மி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதி அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் கல்லூரி சிகிச்சை மையங்களிலும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 3 ஆம் தேதி வரை 4,911 பேருக்கு கரோனா தீநுண்மி இருந்தது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின்னா் 4,415 போ் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளனா். 389 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இம்மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிப்பால் 107 போ் வரை உயிரிழந்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இறப்பு 2.17 சதவீதமாகவும், குணமடைந்தோா் 89.90 சதவீதமாகவும் உள்ளதாக சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.