ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருப்பத்தூா் அருகே கோயில் கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே நெடுமறத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீயோக பைரவா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் அருகே நெடுமறம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்ரீ யோகபைரவா் கோயில் கும்பாபிஷேகம்.
Updated On :14 செப்டம்பர் 2020, 10:02 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே நெடுமறத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீயோக பைரவா் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் யோக பைரவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் மூலவரான யோக பைரவருக்கு பால், சந்தனம், கலச நீரினால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு யோக பைரவரை தரிசனம் செய்தனா். இவ்விழாவினை நெடுமறம் நடுத்தெரு பங்காளிகள் மற்றும் கிராமத்தினா் ஏற்பாடு செய்திருந்தனா். பொதுமக்களுக்கு விழா கமிட்டி சாா்பில் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.