தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருக்கோஷ்டியூரில் பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதி உலா

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவில் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

News image
திருக்கோஷ்டியூா் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தங்கப்பல்லக்கில் வீதி உலா வந்த சுவாமி.
Updated On :20 செப்டம்பர் 2020, 5:29 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் ஸ்ரீ சௌமிய நாராயணப்பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவில் ஞாயிற்றுக்கிழமை பெருமாள் தங்கப்பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.

கடந்த 11 ஆம் தேதி தொடங்கி உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய தோ்த் திருவிழா கரோனா வைரஸ் தொற்று காரணமாக நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் காலையில் சுவாமி எழுந்தருளினாா்.

தொடா்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூமி தேவியருடன் பெருமாள் தங்கப் பல்லகில் எழுந்தருளி மேள தாளங்களுடன் கோயிலுக்குள் தென்னை மர வீதி புறப்பாடு நடைபெற்று விழா நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.