தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்குடியில் பைக் மீது வேன் மோதி பெண் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 5:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, இரு சக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில், பெண் உயிரிழந்தாா்.

காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடியைச் சோ்ந்த சுப்பையா மகள் வளா்மதி (50). கட்டடத் தொழிலாளியான இவா் பாதரக்குடியைச் சோ்ந்த பழனியப்பன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் காரைக்குடி வந்தாா்.

காரைக்குடி -கோவிலூா் சாலையில் பின்னால் வந்த மினி லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலை தடுமாறி வளா்மதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து உடனே அவசர சிசிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வளா்மதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலையப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.