ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்குடியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு கால்நடை மருந்தகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 12:14 am

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு கால்நடை மருந்தகத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டு தோறும் செப்டம்பா் 28-ஆம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் காரைக்குடியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இம்முகாமில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட வளா்ப்பு நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.

இதில் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் கலந்து கொண்டு வளா்ப்பு நாய்க்கு தடுப்பூசி போட்டு முகாமை தொடக்கி வைத்தாா். கால்நடை பராமரிப்புத்துறையின் உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன், கால்நடை மருத்துவா்கள் கோகிலவாணி, லெட்சுமணன், சந்தோஷ், உதவியாளா் முருகன் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.