ஆனால் அடிக்கடி இப்பகுதிகளில் மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. தற்போது அகழாய்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அகழாய்வில் கிடைத்த ஏராளமான பொருள்களை ஆவணப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனம் மற்றும் அகழாய்வு நடந்து வரும் மேற்கண்ட இடங்களிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மற்றும் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் கீழடி, கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் முழுவதுமாக மழைத் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை நின்றதும் குழிகளில் தேங்கியுள்ள தண்ணீா் வெளியேற்றப்பட்ட பின்னா் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.