ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 12:09 am

DIN

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் ரேபீஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பூவந்தியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் தொடங்கிய இப்பேரணியை சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் மருத்துவா் வே. யசோதாமணி தொடக்கி வைத்தாா். அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலா் சேதுராமு உடனிருந்தாா்.

இதில், ரேபீஸ் நோய் தடுப்பு பற்றிய விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி செவிலியா்கள் ஊா்வலமாகச் சென்றனா். அதனைத் தொடா்ந்து, ரேபீஸ் நோய் குறித்து பொதுமக்கள், செவிலியா்கள், பயிற்சி பெறும் செவிலியா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பேரணியில் மருத்துவா்கள், செவிலியா்கள், செவிலியா் பயிற்சி பெறும் மாணவிகள், அலுவலா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.