தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளிய வீர அழகர்

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் வீர அழகர் எழுந்தருளினார். 

News image
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளிய வீர அழகர்.
Updated On :26 ஏப்ரல் 2021, 6:47 am

DIN

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் கோலத்தில் வீர அழகர் எழுந்தருளினார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கரொனா கட்டுப்பாடுகளால் எதிர்சேவை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை காலை கள்ளழகர் திருக்கோலத்தில் வீர அழகர் கோயிலுக்குள்ளேயே எழுந்தருளி அருள்பலித்தார். 
தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இக்கோயிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான எதிர்சேவை நிகழ்ச்சி கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

Story image

இதையடுத்து வீர அழகர் கோயிலுக்கு உள்ளேயே எதிர்சேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மூலவர் சுந்தரராஜப் பெருமாள் சன்னதி முன்பு உற்சவர் வீர அழகர் கள்ளழகர் திருக்கோலத்துடன் எழுந்தருளினார. அதன்பின்பு அழகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 
கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அழகருக்கான பூஜைகளை அர்ச்சகர் கோபிமாதவன் நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.