சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே கீழ நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மனைவி பஞ்சவர்ணம் (68), இவர் இளையான்குடியில் நடந்த வாரச்சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கிராமத்திலிருந்து டவுன் பஸ்சில் ஏறி இளையான்குடி வந்தார். வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த வாரச்சந்தையில் பஞ்சவர்ணம் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் படிப்பறிவில்லாத பஞ்சவர்ணத்தை அணுகி உங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கித் தருகிறேன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பம் கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.