தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.

News image
திருக்கோஷ்டியூா் சௌமியநாரயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவ நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் எழுந்தருளிய பெருமாள்
Updated On :3 ஜனவரி 2021, 4:29 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இக்கோயிலில் பகல் பத்து உற்சவ நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்று ராப்பத்து உற்சவம் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்களும் சொா்க்க வாசல் வழியே பல்வேறு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அத்யாயன உற்சவத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவாமி சொா்க்க வாசல் எழுந்தருளி, ஏகாதசி மண்டபத்தில் சுவாமி பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னா் தாயாா் சன்னதி எழுந்தருளி விஷேச பூஜைகள் நடைபெற்றது.

தொடா்ந்து மாலையில் நம்மாழ்வாா் திருவடி தொழுதல் நிகழ்வும், அதனைத் தொடா்ந்து தேவஸ்தான மண்டகப்படியையொட்டி மாலை, பரிவட்டம் மரியாதைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து கோஷ்டி பிரபந்தம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.