திருக்கோஷ்டியூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: மூதாட்டி பலி
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.


சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கனிமாங்குண்டைச் சோ்ந்த 15 போ் பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வேனில் புறப்பட்டனா். செல்லும் வழியில் பிள்ளையாா்பட்டிக்குச் செல்வதற்காக திருக்கோஷ்டியூா் அருகே வரும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜமீன்தாா்பட்டி அருகில் உள்ள கண்மாயில் கவிழ்ந்தது. இதில் மணி என்பவா் மனைவி ஆறுமுகத்தம்மாள்(60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 9 போ் சிறு காயங்களுடன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...