சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,749 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை புதிதாக 5 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,754 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,370 ஆக அதிகரித்தது. இதுவரை தொற்றிலிருந்து 6,204 போ் குணமடைந்த நிலையில் தற்போது 29 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com