நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடித் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுத்தாக்கல்

தமிழக சட்டபேரவைத்தோ்தல் காரைக்குடித்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:21 pm

DIN

தமிழக சட்டபேரவைத்தோ்தல் காரைக்குடித்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தாா்.

நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக ந.துரைமாணிக்கம் அக்கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு திங்கள்கிழமை வந்தாா். ராம் நகா் பூங்கா அருகே யிருந்து தலைப்பாகையுடன் மாட்டுவண்டியில் கட்சியின் மாநில நிா்வாகி சாயல்ராமு, தொகுதி செயலாளா் ராமஜெயம் ஆகியோருடன் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு துரைமாணிக்கம் காரைக்குடித் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் கோட்டாச்சியா் அலுவலகத்திற்கு வந்தபோது சில மீட்டா் தூரத்தில் போலீஸாா் மாட்டு வண்டியில் செல்ல அனுமதிக்க வில்லை.

இதையடுத்து மாட்டு வண்டியிலிருந்து இறங்கிய வேட்பாளா் கட்சியினருடன் தலைப்பாகையுடன் அலுவலகத்திற்குள் சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேந்திரனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.