மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த திங்கள்கிழமை இரவு வைகையாற்றில் மணல் கடத்திய டிராக்டரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை அருகே செங்கோட்டை காலனியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உதயகுமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சிலர் டிராக்டரில் ஆற்று மணலை ஏற்றி நிரப்பிக் கொண்டிருந்தனர். காவலர்களைக் கண்டவுடன் அவர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு இருட்டுக்குள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அதன் பின்னர் காவலர்கள் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவலர்கள் வழக்குப் பதிந்து தப்பியோடிய மணல் திருடர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மிதமான மழை

மன்னாா்குடியில் மிதமான மழை

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

