மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. 

News image

மானாமதுரையில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவின்போது வளையல்கள், பூமாலைகள் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்.

Updated On :2 ஆகஸ்ட் 2022, 6:31 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. 

இக்கோயிலில் தற்போது ஆடித்தபசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற திரு ஆடிப்பூர சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் அன்ன வாகனத்தில் வளையல் மாலை, பூமாலைகள் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்தார். 

ஆடிப்பூரம் உற்சவத்தின் போது ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்குள் வளையல்கள் வாங்கிய பெண் பக்தர்கள்.

ஆடிப்பூரம் உற்சவத்தின் போது ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்குள் வளையல்கள் வாங்கிய பெண் பக்தர்கள்.

அதன்பின் கும்பம் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹூதி  முடிந்து ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. கோயிலுக்குள் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பூர உற்சவத்தைக் கண்டு தரிசித்தனர். அதன்பின் கோயிலுக்குள் பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் வளையல்களை பெற்றுக் கொண்டனர். 

ஆடித்தபசு விழாவில் இரண்டாவது நாள் ஏ.எல்.எஸ்.ராமையா நாடார் குமாரர்கள் குடும்பத்தினர் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், நடைபெற்று அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று முடிந்ததும் அம்மன் வீதி உலா புறப்பாடு தொடங்கியது.

சிவாச்சாரியார்களின் கைலாய வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் உலா வந்து கோயிலை வந்தடைந்தார். வீதிகளில் மக்கள் ஆனந்தவல்லி அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். இரவில் கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.