மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது.

மானாமதுரையில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவின்போது வளையல்கள், பூமாலைகள் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்.










