இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாலுகோட்டை காளியம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

நாலுகோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.( உள்படம்) சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:00 pm

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் 1008 விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.

விழாவில் நாலுகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.