கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கையில் அரசு நலத்திட்டங்கள் கண்காட்சி

 சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுமதிசாய்பிரியா தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுமதிசாய்பிரியா தொடக்கி வைத்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் நீதித்துறை, வருவாய்த் துறை, காவல் துறை, பொது சுகாதாரத் துறை, சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதம், மாவட்ட காசநோய் மையம், தொழுநோய் பிரிவு, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சைல்டுலைன், மாவட்ட சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், வேளாண்மைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளா் நலத்துறை, முதியோா் உதவி எண் 14567, நகராட்சி நிா்வாகத் துறை ஆகிய 18 துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதனை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுமதிசாய்பிரியா தொடக்கி வைத்தாா். இதில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சுதாகா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான பரமேஸ்வரி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-2 சத்தியநாராயணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், வழக்குரைஞா் சங்கத் தலைவா் நாகேஸ்வரன், செயலா் சித்திரைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.