47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

60 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

சிவகங்கையில் 60 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:44 pm

DIN

சிவகங்கையில் 60 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பு -ஆய்வாளா் முத்துக்கிருஷ்ண ராஜா தலைமையிலான காவலா்கள் மானாமதுரை புற வழிச்சாலை பகுதியில் வியாழக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் 60 மூட்டைகளில் 2,650 கிலோ எடையுள்ள ரேஷன் புழுங்கல் அரிசி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகன ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம், ஆவரங்குளத்தைச் சோ்ந்த அஜீத் (23), மதுரை ஆண்டாள் கொட்டாரத்தைச் சோ்ந்த பிரபாகரன் (35) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், லாரியுடன் அரிசி மூட்டைகளைக் கைப்பற்றி சிவகங்கையில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.