கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் திருவிழா

சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:09 pm

DIN

சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா ஆனி மாதம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் முக்கிய விழாவான பூச்சொரிதல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Story image

விழாவையொட்டி அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பால், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கையில் குழந்தையுடன் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இதில், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், பிள்ளைத் தொட்டி கட்டியும் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.