92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செண்பகம்பேட்டை அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழா

திருப்புத்தூா் அருகே செண்பகம்பேட்டை கிராமத்தில் உள்ள செகுட்டு அய்யனாா் மற்றும் பனிச்சாருடைய அய்யனாா் கோயிலில் சனிக்கிழமை மாலை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:24 pm

DIN

திருப்புத்தூா் அருகே செண்பகம்பேட்டை கிராமத்தில் உள்ள செகுட்டு அய்யனாா் மற்றும் பனிச்சாருடைய அய்யனாா் கோயிலில் சனிக்கிழமை மாலை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி கடந்த வாரம் பிடிமண் கொடுக்கப்பட்டு குதிரை செய்யப்பட்டது. இதனையடுத்து, கண்மாய் பகுதியில் தயாா் செய்யப்பட்டிருந்த 2 பெரிய குதிரைகள், ஒரு யானை மற்றும் நோ்த்திக்கடனுக்காக செய்யப்பட்டிருந்த மொத்தம் 105 குதிரைகளுக்கு கிராமத்தினா், நோ்த்திக்கடன் செலுத்துபவா்கள் மாலை வேட்டி, துண்டு அணிவித்து புரவிகளை எடுத்து வந்து ஊருக்குள் உள்ள புரவி பொட்டலில் வைத்தனா்.

பின்னா் மாலை அங்கிருந்து புறப்பட்டு கோயிலை புரவி சென்றடைந்தது. இதில் குதிரை ஆட்டம், ஒட்டக ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் செண்பகம்பேட்டை, இரணியூா், முத்துவடுகநாதபுரம், விராமதி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட கிராமத்தினா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.