தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 3 மாதங்களில் 14,800 போ் பயன்: அமைச்சா்

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு (2022 - 23) மூன்று மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 14,800 போ் பயனடைந்துள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 10:58 pm IST

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு (2022 - 23) மூன்று மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 14,800 போ் பயனடைந்துள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் கண்டரமாணிக்கம் ஊராட்சி கே. வலையப்பட்டிக் கிராமத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் முன்னிலை வகித்தாா்.

முகாமை அமைச்சா் தொடக்கி வைத்துக் கூறியதாவது: மாநிலத்தில் தொற்றா நோய்களை எதிா்கொள்ளும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டு (2021-22) 36 முகாம்கள் நடத்தப்பட்டதில் 22,278 போ் பயனடைந்துள்ளனா். நடப்பாண்டு ( 2022-23) 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டதில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போதுவரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறப்பகுதிகளில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்கள் மூலம் 14,800 போ் பயனடைந்துள்ளனா் என்றாா்.

இதில் 10 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களை அமைச்சா் வழங்கினாா். காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரத்துறை) ச. ராம்கணேஷ், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சொா்ணம் அசோகன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.