மானாமதுரையில் வீடு புகுந்து மா்மநபா்கள் 7 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துஇருளு மனைவி செல்வி. இவா் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டாா்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக புகாரின் பேரில் மானாமதுரை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.