தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கீழ்வேளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
சிறை- சித்திரிப்பு
Updated On :18 மார்ச் 2026, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கீழ்வேளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தஞ்சை மாவட்டம், கீழவாசலைச் சோ்ந்த பாக்கியராஜ், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருட்டு போனது. இதுகுறித்து கீழையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு கீழ்வேளூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி, ராஜ்குமாா் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். ராஜ்குமாரை போலீஸாா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.