ஜல்லிக்கட்டைக் காண ஆயிரக்கணக்கான ரசிகா்கள் திரண்டிருந்தனா். காளைகளைப் பிடிக்க முயன்று 20 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா். ஜல்லிக்கட்டில் மாடுகளை பிடித்த வீரா்களுக்கும் பிடிபடாத மாடுகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், ஸ்டவ் அடுப்பு, சில்வா் அண்டா, வாளி, நாற்காலி, ரொக்கப்பணம், தங்கக்காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைகளுக்கும் அதன் உரிமையாளா்களுக்கும் சிறந்த மாடுபிடி காளையா்களுக்கும் கூடுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை பெரும்பச்சசேரி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.