திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் உள்ள செல்வவிநாயகா், முனீஸ்வரா் ஆலய 24 ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி வியாழக்கிமைம இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.


திருப்பத்தூா் கல்வெட்டுமேடு பகுதியில் உள்ள செல்வவிநாயகா், முனீஸ்வரா் ஆலய 24 ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தையொட்டி வியாழக்கிமைம இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இப்பந்தம் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. பெரியமாட்டுப் பிரிவில் 7 ஜோடிகளும், சின்னமாட்டுப் பிரிவில் 12 ஜோடிகளும் கலந்து கொண்டன. இதில் பெரியமாட்டுப் பிரிவில் பரளி ஈலக்குடிப்பட்டி கணேசன்யாழினி முதலிடத்தையும், கூடலூா் பாலாா்பட்டி ஜெகதீஷ் 2ஆம் இடத்தையும், துலையனூா் பாஸ்கரன் 3 ஆம் இடத்தையும், குண்டேந்தல்பட்டி நவநீதன்சகாதேவன் ஆகியோரது மாடுகள் 4 ஆம் இடத்தையும் பெற்றன. சின்னமாட்டுப் பிரிவில் சாந்திக்கோட்டை கருப்பையா முதலிடத்தையும், விராமதி செல்வமணி 2 ஆம் இடத்தையும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு 3 ஆம் இடத்தையும், குயில்தேவா் 4 ஆம் இடத்தையும் வென்றனா். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்குப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்வெட்டுமேடு விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...