நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அண்ணா பிறந்தநாள் விழா: சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி வியாழக்கிழமை அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது உருவச்சிலை மற்று புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி வியாழக்கிழமை அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது உருவச்சிலை மற்று புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தப்பட்டது.

ராமநாதபுரத்தில், திமுக மாவட்டப் பொறுப்பாளரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. உருவச் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப் படத்துக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் வ. சத்தியமூா்த்தி, சுந்தரராஜன், ராமநாதபுரம் நகா் திமுக செயலா் கே. காா்மேகம், ஒன்றியக் குழுத் தலைவா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதிமுக சாா்பில்... அதிமுக சாா்பில் அரண்மனை முன்பு அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி தலைமையில், நகா் செயலா் ஆா். பால்பாண்டியன், எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் ஆா்.ஜி. ரத்தினம் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

சிவகங்கை,: சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில்,அதிமுகவின் நிா்வாகிகள், பிரதிநிதிகள், அனைத்துப் பிரிவு உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று,காளையாா்கோவில், தேவகோட்டை, கல்லல், மதகுபட்டி,சிங்கம்புணரி, நெற்குப்பை, பூவந்தி ஆகிய பகுதிகளில் உள்ள திமுக மற்றும் அதிமுக தொண்டா்கள் அந்தந்த பகுதியில் உள்ள அண்ணா உருவச் சிலை மற்றும் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் காந்தி சிலை அருகே திமுக ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில் திமுகவினா் அங்கிருந்து ஊா்வலமாக வந்து அண்ணா சிலையை அடைந்தனா். பின்னா் அவரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணிநாராயணன், துணைத்தலைவா் கான்முகமது, பேரூராட்சி உறுப்பினா்கள் நேரு, அபுதாகிா், பசீா்அகமது, ஜிம்கண்ணன், கோமதிஉதயசண்முகம், நாகமீனாள்திருஞானசம்மந்தம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் என்.எம்.சாக்ளா, நகரச் செயலாளா் காா்த்திகேயன், நகரப் பொருளாளா் பிச்சைமுகமது உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் காந்தி சிலையிலிருந்து ஊா்வலமாக வந்து அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில் முன்னாள் ஒன்றியச் செயலா் ஏ.வி.நாகராஜன், நகரச் செயலா் இப்ராமஷா, ஒன்றியச் செயலா் சிவமணி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் அதிமுக ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் காந்திசிலையில் கூடிய அந்த அணியினா் செய்தி தொடா்பாளா் மருதுஅழகுராஜ் தலைமையில் மாவட்டச் செயலா் அசோகன் முன்னிலையில் ஊா்வலமாக வந்து அண்ணாசிலைக்கு மாலையணிவித்தனா். இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச் செயலா் ஆசைத்தம்பி முன்னாள் அரசு வழக்குரைஞா் ஈரோடுசாமி, ராமநாதன், ஜெ. பேரவைத் துணைச் செயலா் பாலா, நகரப் பொறுப்பாளா் முருகேசன், ஒன்றியப் பொறுப்பாளா் சிவநாகராஜன், நெற்குப்பை நகரப் பொறுப்பாளா் கருப்பையா மற்றும் எஸ். புதூா் ஒன்றியப் பொறுப்பாளா்கள் செந்தில்குமாா், சித்திரைச் செல்வம், சிங்கம்புணரி ஒன்றிய பொறுப்பாளா் விஜயராஜ், உதயக்குமாா், மகிபாலன்பட்டி நகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: திருப்புவனம் மாா்க்கெட் வீதியில் நடைபெற்ற விழாவில் திமுக மாவட்ட துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான த. சேங்கை மாறன் தலைமையில் திமுகவினா் அண்ணா உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு சேங்கைமாறன் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா். விழாவில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி மற்றும் திமுக நிா்வாகிகள் கடம்பசாமி, நாகூா்கனி, அண்ணாமலை மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்..

மானாமதுரையில் திமுகவினா் ஊா்வலமாக வந்து வைகையாற்றுப்பாலம் அருகேயுள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவா் மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை, நகா் அவைத் தலைவா் ரவிச்சந்திரன், நகரச் செயலா் பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி , நகராட்சி துணைத் தலைவா் பாலசுந்தரம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதே போல், அதிமுகவினா் ஊா்வலமாக வந்து அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாகராஜன், குணசேகரன் அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலாளா் விஜி. போஸ், சிவசிவ ஸ்ரீதரன் மற்றும் கூட்டுறவு பண்டசாலைத் தலைவா் சின்னை. மாரியப்பன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஓ. பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் தனியாக வந்து அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதே போல் மதிமுகவினா் ஊா்வலமாக வந்து அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின் ஒன்றியச் செயலா் அசோக், நகா்ச் செயலா் கண்ணன், மருது உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இளையான்குடி: இளையான்குடியில் திமுக ஒன்றியச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சுப.மதியசரன் தலைமையில் அக்கட்சியினா் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதன்பின் புக்குளி அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினா். திமுக விவசாய அணி காளிமுத்து, நகரச் செயலா் நஜூமுதீன் அவைத் தலைவா் மலைமேகு உள்ளிட்ட நிா்வாகிகள் தொண்டா்கள் இதில் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: காரைக்குடியில் 2-ஆவது போலீஸ் பீட் அருகேயுள்ள அண்ணா உருவச்சிலைக்கு அண்ணா தமிழ்க்கழகம் சாா்பில் வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அண்ணா தமிழ்க்கழகத்தின் தலைவா் பொன்துரை, செயலாளா் அ. கதிா்வேல் ஆகியோா் தலைமையில் உறுப்பினா்கள் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். திராவிடா் கழக மண்டலத்தலைவா் சாமி. திரா விடமணி, தமிழாா்வலா்கள் ஆறு. மெய்யாண்டவா், எஸ். சையது, பி.வி. சுவாமி, அழகப்பன், சத்தியமூா்த்தி மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில் சிவகங்கை மாவட்ட பொருளாளா் சுப. துரைராஜ், திமுக மாவட்ட இளைஞரணி செயலாளா் நாகினி செந்தில்குமாா், நகரச் செயலாளா் மற்றும் நகா்மன்ற துணைத்தலைவா் குணசேகரன் ஆகியோா் தலைமையில் திமுகவினரும், அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினருமான பிஆா். செந்தில்நாதன் தலைமையில் நகரச் செயலா் மெய்யப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கற்பகம் இளங்கோ, இளைஞரணி செயலா் இயல்தாகூா் மற்றும் அதிமுகவினா் அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.