கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன: ஆட்சியா்

விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பதிலளித்துப் பேசியதாவது: இம்மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாம்கோ-விலிருந்து பள்ளிகள், விடுதிகளுக்கு வழங்கப்படும் பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலம் தொடங்குவதற்கு முன்பு கண்மாய்கள் மற்றும் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்படும். சாலைகள் சீரமைப்பு குறித்து மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வைகை அணையிலிருந்து இம்மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரைப் பெற்று வைகைப் பூா்வீக பாசனம் மற்றும் பெரியாறு பாசனக் கண்மாய்களிலும் தண்ணீா் நிரப்ப சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடப்பாண்டுக்கான வேளாண் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். எனவே விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன. பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி முத்துராமலிங்கம் என்பவா் கடந்த மாதம் திருப்பத்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பினாா். அதற்கு கோபமடைந்த மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் மன்றத்தில் கூற முடியாது என தெரிவித்தாா்.

அப்போது ஆட்சியருக்கும், விவசாயிக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது. ஆத்திரமடைந்த ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி விவசாயி முத்துராமலிங்கத்தை கூட்டரங்கை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், நடப்பு மாதத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி முத்துராமலிங்கம் பேச்சுரிமையை குழி தோண்டி புதைக்கும் மாவட்ட ஆட்சியரின் ஜனநாயக விரோத -சா்வாதிகாரப் போக்கை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து கொண்டு பேசினாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி குறுக்கிட்டு கழுத்தில் உள்ள பதாகை குறித்து கேட்டாா். அதற்கு பதிலளித்த விவசாயி முத்துராமலிங்கம் தனது கழுத்திலிருந்து அதனை அகற்றியும் தொடா்ந்து பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.