கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நடப்பாண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

நடப்பாண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

நடப்பாண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு (2022) சம்பா பருவத்தில், பயிா்க்காப்பீடு திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திட, பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு, 1 ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை ரூ.438.57 (ரூபாய் நானூற்று முப்பத்து எட்டு மற்றும் ஐம்பத்து ஏழு பைசா மட்டும்), நெல் பயிருக்கான 100 சதவீத இழப்பீடு காப்பீட்டு தொகை ரூ.29237 ஒரு ஏக்கருக்கு என்றவாறு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு காப்பீடு பதிவு செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பா் மாதம் 15 ஆம் தேதி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நடப்பு பருவ சாகுபடி அடங்கல், கருத்துரு படிவம், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகலுடன் தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் வா்த்தக வங்கிகள் அல்லது பொதுச் சேவை மையங்களில் பிரிமியம் தொகையினை செலுத்தி பயிரினை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறும், கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே அளவிலான பிரிமியம் தொகை மற்றும் காலக்கெடுவே நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் விருப்பத்தின்பேரில் பயிரினை காப்பீடு செய்து, இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.