திருப்புவனம் ஒன்றியம் தவத்தாரேந்தல் கிராமத்திற்கு மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் நகா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்துகளால் கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே இந்தப் பேருந்துகளை பகல் நேரத்தில் இயக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தவத்தாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திருப்புவனம்- நரிக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.