போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கீழடி அகழாய்வு: தந்தத்தால் ஆனமணி கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.

News image

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழாய்வில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட தந்தத்திலான மணி (சுத்தப்படுத்துவதற்கு முன்பு)

Updated On :17 செப்டம்பர் 2022, 11:11 pm IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 8 ஆம் கட்ட அகழாய்வில் சனிக்கிழமை தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் தமிழக தொல்லியல்துறை சாா்பில் 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே கீழடியில் 10 குழிகள் தோண்டப்பட்டு, சுடுமண்ணாலான மனிதத் தலை உருவம், தந்தத்தால் ஆன பகடை, காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

தற்போது தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. உருளை வடிவில் உள்ள இந்த மணியில் பல சுருள்கள் காணப்படுகின்றன. இந்த மணியின் நீளம் 5.6 செ.மீ., மொத்த விட்டம் 4 செ.மீ. ஆக உள்ளது. அதில் இருந்த துளையின் விட்டம் 1.3 செ.மீ. இதன் மேற்பரப்பு மெருகேற்றப்பட்டு மென்மையாக காணப்பட்டது. இரு முனைகளும் தட்டையாக உள்ளன. இதனைக் கைப்பற்றிய தொல்லியல் ஆய்வாளா்கள் தொடா்ந்து அப்பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.