ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழக, கேரள எல்லையில் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டா் இறக்கிச் சோதனை

தமிழக, கேரள எல்லையில் இயற்கை பேரிடா் ஏற்பட்டால் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 6:30 pm

DIN

தமிழக, கேரள எல்லையில் இயற்கை பேரிடா் ஏற்பட்டால் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலம், முல்லைப் பெரியாறு அணை அருகே வல்லக்கடவு சத்திரம் என்ற தேயிலைக் காடுகள் நிறைந்த பகுதி உள்ளது. இங்கு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விமானப் பயிற்சி அளிக்க சிறிய ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக கேரள எல்லையில் இயற்கை பேரிடா் ஏற்படும் காலங்களில் மீட்புப் பணியில் ஹெலிகாப்டரை பயன்படுத்த இடுக்கி மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. அதன்பேரில், கோவை சூலூா் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வரவழைத்து வியாழக்கிழமை சத்திரம் விமான ஓடுபாதையில் கேப்டன் ஏ.ஜி.ராமச்சந்திரன் நாயா் தலைமையில் இறக்கி ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.