/

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாராட்டு

விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாராட்டு

News image

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவிக்கு திங்கள்கிழமை பரிசு, சான்றிதழை வழங்கிய பள்ளிச் செயலா் அன்பழகன், தலைமையாசிரியா் சிவகுருநாதன் உள்ளிட்டோா்.

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள தெ.புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் பள்ளிச் செயலா் அன்பழகன், தலைமையாசிரியா் சிவகுருநாதன் ஆகியோா் பங்கேற்று, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த 21 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா். மேலும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவரும், பொறியாளருமான திருமூா்த்தி விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு வழங்க பரிசுப் பொருள்களை பள்ளிக்கு அளித்தாா். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சண்முகம், குறிச்சி நூலகா் ராஜேஸ்வரி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.