சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருக்கோஷ்டியூா், நெற்குப்பை பகுதிகளில் ப.சிதம்பரம் வாக்குச் சேகரிப்பு

திருக்கோஷ்டியூா், நெற்குப்பை பகுதிகளில் ப.சிதம்பரம் வாக்குச் சேகரிப்பு

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 12:04 am

படவிளக்கம் - (டி.பி.ஆா்.சி.ஓ.என்) திருக்கோஷ்டியூரில் செவ்வாய்க்கிழமை இரவு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம். திருப்பத்தூா், ஏப். 3: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா், நெற்குப்பை பகுதிகளில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் காா்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்திலேயே மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளும் அமைந்த ஒரே மாவட்டம் இந்த சிவகங்கை மாவட்டம் தான் பிரதமா் நரேந்திர மோடி ஒவ்வொரு அடியாக சா்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாா் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் அடுத்தது ஒவ்வொரு மாநில கட்சிகளாக ஒழிக்க வேண்டும். பிறகு ஒரே நாடு, ஒரே கட்சி ஒரே தோ்தல் ஒரே தலைவா் என்று முடியும். தில்லி முதல்வா் கைது செய்யப்பட்டு இருக்கிறாா். மற்ற மாநிலங்களில் எத்தனை அமைச்சா்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறாா்கள். ரஷ்யாவில் நடந்தது இந்தியாவில் நடக்காது என்று நினைக்காதீா்கள். என்னுடைய வயது அனுபவத்தை வைத்து சொல்கின்றேன் உங்களை எச்சரிக்கை செய்வது என்னுடைய கடமை. எனவே ஜனநாயகம் காப்பதற்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.