தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காளையார்கோவிலில் சொர்ணவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்

ஆடிப்பூர உற்சவத் திருவிழா..

News image
தேரோட்டம்- Din
Updated On :6 ஆகஸ்ட் 2024, 7:47 am

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள சொர்ணவல்லி அம்பிகை சமேத சொர்ணகாளீஸ்வரர் கோயில் ஆடிப்பூர உற்சவத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானம் காளையார்கோவில் சொர்ணவல்லியம்மன் சமேத சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் ஆடிப் பூர உற்சவ விழா அம்மன் சந்நிதியில் ஜூலை 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மன் தேருக்கு எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் வடம் பிடிக்க காலை 9 மணி அளவில் தேர் புறப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் சொர்ணவல்லி அம்பிகை

சிறப்பு அலங்காரத்தில் சொர்ணவல்லி அம்பிகை

கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர் சுமார் 10 மணியளவில் நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில், காளையார்கோவில், சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து புதன்கிழமை ஆடிப்பூர விழாவும், வியாழக்கிழமை மாலை தபசுக் காட்சியும், வெள்ளிக்கிழமை (9.8.2024) பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோயில் கண்காணிப்பாளர் பாலசரவணன் ஆகியோரும் பூஜைகளை காளீஸ்வர குருக்களும் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.