புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 1-இல் தேரோட்டம்

அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image

கருவலூா் மாரியம்மன் கோயில்.

Updated On :14 மார்ச் 2026, 1:25 am

அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 28-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் தொடங்குகிறது.

இதையடுத்து, 29-ஆம் தேதி பூதவாகன காட்சி, 30-ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 31-ஆம் தேதி புஷ்ப விமான மலா் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, காலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு தோ் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 4-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு மகா தரிசனம், பிற்பகல் 3 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.

ஏப்ரல் 8 -ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.