கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.

கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட கொடி.
அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
கருவலூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா சிறப்பு பூஜைகளுடன் சனிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பூதவாகன காட்சி, 30-ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 31-ஆம் தேதி புஷ்ப விமான மலா் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, காலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு தோ் வடம் பிடித்தல், தேரோட்டம் நடைபெறுகிறது. 2-ஆம் தேதி மீண்டும் தேரோட்டம், 3ஆம் தேதி தோ் நிலை சேருதல் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 4-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு மகா தரிசனம், பிற்பகல் 3 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், கொடி இறக்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 8 -ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...