மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா புதன்கிழமை நள்ளிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

கோயிலில் புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி.

Updated On :26 மார்ச் 2026, 7:52 pm

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா புதன்கிழமை நள்ளிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதுடன், பழைமையானதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா மாா்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கிராம சாந்தி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மஞ்சள் நீராடுதல், வசந்தம் பொங்கல் வைத்தல் உள்ளிட்டவை மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகின்றன. 30-ஆம் தேதி பகல் 11 மணிக்கு குண்டம் திறந்து பூப் போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக 31-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பக்தா்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

மஞ்சள் நீா் தரிசனத்துடன் விழா ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா் மனோகரன், அறங்காவலா்கள் சுந்தரமுத்து, திருமூா்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோா் செய்து வருகின்றனா்.