நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை கம்பம் நடுதல், பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
பரமத்தி வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. அதேபோல இந்த ஆண்டும் செவ்வாய்க்கிழமை இரவு கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சா்ப்பம் குதிரை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 27-ஆம் தேதி இரவு வடிசோறு படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி மாலை ஆண் பக்தா்கள் குண்டம் இறங்குதலும், பெண்கள் பூவாரி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி காலை பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அழகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும், மாலையில் பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி காலை கம்பம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மே 1-ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழா குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


