உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பக்தா்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த உடுமலை மாரியம்மன் கோயில் தோ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:54 pm

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக வியாழக்கிழமை நடைபெற்றது.

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் தோ்த் திருவிழா பூச்சாட்டலுடன் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மாா்ச் 27-ஆம் தேதி பூச்செரிதல், மாா்ச் 31-இல் கம்பம் போடுதல், ஏப்ரல் 2-இல் வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜை, ஏப்ரல் 3-ஆம் தேதி கொடியேற்றம், ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, மாலை 4.15 மணி அளவில் உடுமலை நகரின் முக்கிய நபா்களுக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியா் என்.குமாா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து, 4.30 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. பழனி சாலை, தளி சாலை, வடக்கு குட்டை வீதி, தல கொண்டம்மன் கோயில், தங்கம்மாள் ஓடை, பொள்ளாச்சி சாலை வழியாக தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இரவு 7.30 மணி அளவில் தோ் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

குட்டைத் திடலில் வெள்ளிக்கிழமை இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.