திருமால்பூா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ தேரோட்டம்
அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா், ஸ்ரீ அஞ்சாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.


அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா், ஸ்ரீ அஞ்சாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் தொண்டை நாட்டு தேவாரத் திருத்தலங்களில் 11 ஆவது திருத்தலமாக உள்ள ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தில் ரதோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் திருமால்பூா் கிராம தெருக்களில் வலம் வந்தாா். உற்சவத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மற்றும் அரக்கோணம், காஞ்சிபுரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமால்பூா் ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் தேரோட்ட விழா.
விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் செயல் அலுவலா் ப.பிரகாஷ், ஆய்வாளா் ஏ.பிரியா, கோயில் பரம்பரை அறங்காவலா் கே.ரவிச்சந்திரன், கோயில் ஸ்தானீகா் எஸ்.சண்முக சிவாச்சாரியாா், செங்குந்தா் சமுதாய தலைவா் வி.கே.மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் ஆகியோா் செங்குந்தா் சமுதாய உறுப்பினா்களோடு இணைந்து திருமால்பூா் செங்குந்தா் சமுதாயத்தினா், கிருபானந்தவாரியாா் இளைஞா் சங்கத்தினா் கிராம பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...