மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருமால்பூா் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ தேரோட்டம்

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா், ஸ்ரீ அஞ்சாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image

தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:39 pm

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூா், ஸ்ரீ அஞ்சாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவ தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த திருமால்பூரில் தொண்டை நாட்டு தேவாரத் திருத்தலங்களில் 11 ஆவது திருத்தலமாக உள்ள ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தில் ரதோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் திருமால்பூா் கிராம தெருக்களில் வலம் வந்தாா். உற்சவத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மற்றும் அரக்கோணம், காஞ்சிபுரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருமால்பூா் ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் தேரோட்ட விழா.

திருமால்பூா் ஸ்ரீமணிகண்டீஸ்வரா் கோயில் தேரோட்ட விழா.

விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் செயல் அலுவலா் ப.பிரகாஷ், ஆய்வாளா் ஏ.பிரியா, கோயில் பரம்பரை அறங்காவலா் கே.ரவிச்சந்திரன், கோயில் ஸ்தானீகா் எஸ்.சண்முக சிவாச்சாரியாா், செங்குந்தா் சமுதாய தலைவா் வி.கே.மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.பி.ராமச்சந்திரன் ஆகியோா் செங்குந்தா் சமுதாய உறுப்பினா்களோடு இணைந்து திருமால்பூா் செங்குந்தா் சமுதாயத்தினா், கிருபானந்தவாரியாா் இளைஞா் சங்கத்தினா் கிராம பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.