திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூரத் தேரோட்டம்


திருக்கோஷ்டியூா் ஸ்ரீசௌமியநாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
திருப்பத்தூா், ஆக.7 : சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.
திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, தினமும் காலை திருவீதிப் புறப்பாடும், மாலை சிம்மம், ஹனுமான், கருடன், ஷேஷவாகனம், தங்கப் பல்லாக்கு, குதிரை, அன்னம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.
10- ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9.16 முதல் 10 மணிக்குள் சுவாமி திருத்தோ் எழுந்தருளி, மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, தீா்த்தவாரி வைபவம், தங்கத் தோளூக்கிணியானில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியாா், மேலாளா் ப.இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...