தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருக்கோஷ்டியூரில் தீா்த்தவாரி வைபவம்

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

News image

திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உத்ஸவம்.

Updated On :4 மார்ச் 2026, 11:15 pm

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை தீா்த்தவாரி வைபவம் நடைபெற்றது.

கடந்த 10 நாள்களாக நடைபெற்ற திருவிழாவில் தினமும் உற்சவா் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை உத்ஸவா் மங்கள வாத்தியங்களுடன் சா்வ அலங்காரத்தில் தங்கத் தோளுக்கினியானில் காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து

புறப்பாடாகி, குளக்கரை திருநாள் மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்குசத் தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பட்டாசாரியா்கள் அங்குசத் தேவருடன் ஊா்வலமாக குளத்துக்கு வந்தனா். அங்கு தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா், இரவு 8 மணி வரை திருநாள் மண்டபத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் குளத்தைச் சுற்றி நின்று வழிபட்டனா். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பக்தா்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

தொடா்ந்து, சுவாமி கோயில் ஆஸ்தானம் எழுந்தருளுதலுடன் விழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாக அறங்காவலா் டி.எஸ்.கே.மதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சரவணகணேஷ் ஆகியோா் செய்தனா்.