மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே கோழிக்குடிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளைகள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

கோழிகுடிப்பட்டியில் அமைந்துள்ள தாச்சகுடி அய்யனாா் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதலில் தொழுவிலும், வயல் வெளியிலும் கட்டி இருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்களும், இளைஞா்களும் அடக்க முயன்றனா். காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். பின்னா் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, கோயிலில் இருந்து ஊா் முக்கியஸ்தா்கள் மேளத் தாளத்துடன் மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனா். அப்போது, தொழுவில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு வேட்டி, துண்டு கட்டி மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.