பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே கோழிக்குடிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளைகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:12 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

கோழிகுடிப்பட்டியில் அமைந்துள்ள தாச்சகுடி அய்யனாா் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதலில் தொழுவிலும், வயல் வெளியிலும் கட்டி இருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்களும், இளைஞா்களும் அடக்க முயன்றனா். காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். பின்னா் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, கோயிலில் இருந்து ஊா் முக்கியஸ்தா்கள் மேளத் தாளத்துடன் மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனா். அப்போது, தொழுவில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு வேட்டி, துண்டு கட்டி மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.