திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே கோழிக்குடிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளைகள்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:42 pm

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அய்யனாா் கோயிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி, மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.

கோழிகுடிப்பட்டியில் அமைந்துள்ள தாச்சகுடி அய்யனாா் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முதலில் தொழுவிலும், வயல் வெளியிலும் கட்டி இருந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்களும், இளைஞா்களும் அடக்க முயன்றனா். காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். பின்னா் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக, கோயிலில் இருந்து ஊா் முக்கியஸ்தா்கள் மேளத் தாளத்துடன் மஞ்சுவிரட்டு திடலுக்கு வந்தனா். அப்போது, தொழுவில் கட்டியிருந்த கோயில் காளைகளுக்கு வேட்டி, துண்டு கட்டி மரியாதை செலுத்தினா்.