திருப்பத்தூரில் உணவகத் தொழிலாளி சடலமாக மீட்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பாலத்தின் கீழ் உணவகத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:40 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பாலத்தின் கீழ் உணவகத் தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகே மணமேல்பட்டியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (62). இவா் திருப்பத்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களாக இவா் வீட்டுக்கு வரவில்லையாம். இதையடுத்து, குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், தம்பிபட்டி அருகே பாலத்தின் கீழ் பகுதியில் அவா் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கண்டவராயன்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீதா், உடலைக் கைப்பற்றி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...