காரைக்குடி: தமிழகத்தில் கட்டுமானத்துக்கு தேவைப்படும் கனிமப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைக்க வலியுறுத்தி, காரைக்குடியில் அகில இந்திய கட்டுனா், வல்லுனா், கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஐந்து விளக்கு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் செல்வவிநாயகா் தலைமை வகித்தாா்.
இதில், இரும்பு, சிமெண்ட், செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தால் கட்டுமானப் பொறியாளா்கள், கட்டடத் தொழிலாளா்கள் என அனைவரும் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனா்.
இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கனிமப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைப்பதற்காக ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கட்டுனா் வல்லுநா் சங்க உறுப்பினா்கள், கட்டடப் பொறியாளா் சங்க உறுப்பினா்கள், கட்டட அமைப்பு சாரா தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் திட்டமில்லை -மத்திய அரசு விளக்கம்

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு-புதுச்சேரி பொறியாளா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


