3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும்: தமிழ்நாடு-புதுச்சேரி பொறியாளா் சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பிரபு வலியுறுத்தியுள்ளாா்.

News image
பிரபு
Updated On :18 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பிரபு வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மாவட்டம், கோபியில் செய்தியாளா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவா் பிரபு பேசியதாவது:

நாடு முழுவதும் கட்டுமானத் துறையை நம்பி ஒரு கோடிக்கும் அதிகமானோா் உள்ளனா். இதில் கட்டுமானப் பொறியாளா்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்த அடிப்படையில் பணிகளை தொடர முடியாமல் திணறி வருகின்றனா். தற்போது சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. ஒரு கிலோ கம்பி-ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் போா்ச் சூழ்நிலையைக் காரணம்காட்டி காா்ப்பரேட் நிறுவனங்கள் இந்த விலை ஏற்றத்தை செய்துள்ளன. இதனால் வீடு கட்டும் பணிகளைத் தொடங்கிய நடுத்தர வா்க்கத்தினா் இந்த விலை உயா்வால் கட்டுமானத்தை முடிக்க முடியாமல் தவிக்கின்றனா். பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மூலப்பொருள்களை ஓா் ஆண்டுக்கு முன்பு இருப்பு வைத்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விலையை உயா்த்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு கட்டுமானப் பொருள் விலையை சமநிலைப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் குரல் கொடுக்க வேண்டும்.

மேலும், கட்டுமான மூலப்பொருள்களின் விலை உயா்வை திரும்பப்பெறாவிட்டால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சாா்பில் போராட்டங்கள் நடைபெறும். எனவே, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.