மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மானாமதுரையில் மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 போ் கைது

ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா்ரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மானாமதுரையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா்.

Updated On :8 ஜூலை 2024, 9:50 pm

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மானாமதுரை சிப்காட் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தாய் தமிழா் கட்சி சாா்பில் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் தலைவா் பி.எம். பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ச.அ. செல்வம் உள்பட திரளானோா் மறியலில் பங்கேற்றனா். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.