மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை சிப்காட் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தாய் தமிழா் கட்சி சாா்பில் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் தலைவா் பி.எம். பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ச.அ. செல்வம் உள்பட திரளானோா் மறியலில் பங்கேற்றனா். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








