மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை சிப்காட் பகுதியில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு வலுத்து வரும் நிலையில், ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தாய் தமிழா் கட்சி சாா்பில் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் தலைவா் பி.எம். பாண்டியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ச.அ. செல்வம் உள்பட திரளானோா் மறியலில் பங்கேற்றனா். இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.
தொடர்புடையது

மானாமதுரையில் காங்கிரஸாா் இருசக்கர வாகனப் பிரசாரம்

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

நாம் தமிழா் கட்சியினா் 6 போ் மீது வழக்கு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

