நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அழகப்பா பல்கலை.யில் சிறாா் காப்பகம் திறப்பு

அழகப்பா பல்கலை.யில் சிறாா் காப்பகம் திறப்பு

News image
Updated On :13 ஜூலை 2024, 7:23 pm

Din

காரைக்குடி, ஜூலை 13: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உமையாள் ராமநாதன் சிறாா் காப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

பணிபுரிந்து வரும் தாய்மாா்களின் குழந்தைகளுக்கு பகல் நேர பராமரிப்பு வசதிகளை வழங்குவதே இந்தக் காப்பகத்தின் நோக்கமாகும். பணிபுரியும் தாய்மாா்கள் பணிபுரியும் இடத்திலும், வீட்டிலும் வாழ்க்கையைச் சீராக சமநிலைப்படுத்த இது உதவுகிறது.

விழாவுக்கு துணைவேந்தா் க.ரவி தலைமை வகித்துப் பேசினாா்.

இதில் பல்கலைக்கழக பதிவாளா் அ.செந்தில்ராஜன், ஆட்சிக் குழு உறுப்பினா் எஸ்.ராசாராம் ஆகியோா் பேசினா். காரைக்குடி கனரா வங்கியின் முதன்மை மேலாளா் விட்டல் மல்லப்பா மாளகி வாழ்த்திப் பேசினாா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், குழந்தைகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவா் கே.மணிமேகலை வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் வீரமணி நன்றி கூறினாா்.